ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளிக்கிழமை 4 கால்களுடன் கோழிக் குஞ்சு பிறந்துள்ளது.இதைப் பார்க்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரி கிராமம் உள்ளது.இங்கு பொன்முனியசாமி (45) என்பவரின் வீட்டில் நாட்டுக் கோழியை வளர்த்து வந்தார். அதன் முட்டைகளைச் சேர்த்து குஞ்சு பொறிக்க வைத்தார். அவற்றில் ஒரு முட்டையிலிருந்து அதிசயமாக 4 கால்களுடன் குஞ்சு பிறந்துள்ளது.
4 கால்களுடன் மற்ற குஞ்சுகளைப் போல சாதாரணமாக நடக்கவும், ஓடவும் அது செய்கிறது. இதைப் பார்க்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.