தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலர் பதவிக்கு 5 பேர் இன்று விருப்ப மனு கொடுத்தனர்.
அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் கடந்த இரு மாதங்களாக பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.முதலில் கிளை நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த பதவிகளுக்கு பலர் மனு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட செயலர் பதவிக்கு தற்போதைய மாவட்ட செயலர் எஸ்.பி. சண்முகநாதன், முன்னாள் மாவட்ட செயலர் இரா. ஹென்றி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி.ஆர். ரமேஷ், திருச்செந்தூர் ஒன்றிய முன்னாள் செயலர் பள்ளத்தூர் முருகேசன், உடன்குடி மனோகர் ஆகியோர் மனு கொடுத்தனர்.
இதேபோன்று மாவட்ட அவைத் தலைவர், துணைச் செயலர், இணைச் செயலர்,பொருளாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் பலர் மனு கொடுத்துள்ளனர்.