தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தூத்துக்குடியில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் முகாம்
தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் பாரத ரிசர்வ் வங்கி சார்பில் பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பொதுமேலாளர் (வணிக வளர்ச்சி) எஸ். செல்வன் ராஜதுரை தலைமை வகித்தார். முகாமில் ஏராளமானோர் பழைய மற்றும் கிழிந்த நோட்டுகளைக் கொடுத்துவிட்டு புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கிச் சென்றனர்.
முகாமில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பழைய, கிழிந்த நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுகள் கொடுக்கப்பட்டன.