News

ஓடி விளையாடாத குழந்தைகளுக்கு சர்க்கரை நோய்
August 24, 2009, 6:25 PM
 
இன்றைய குழந்தைகள் கம்ப்யூட்டர், டி.வி. முன்பு `தவம்' கிடப்பதால், அந்த சின்ன வயதிலேயே குண்டாகிவிடுகிறார்கள். `மாலையில் ஓடி விளையாடு பாப்பா' என்ற பாரதியாரின் அறிவுரையையும் இன்றைய குழந்தைகள் பலர் மறந்துவிட்டார்கள். இதனால், சர்க்கரைநோயும் அவர்களை பதம் பார்த்துவிடுகிறது.

பள்ளியில் படிக்கும்போதே உடல் பருமன் பிரச்சினைக்கு ஆளாகி சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகும் பள்ளிக்குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்ற கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை இன்றைய குழந்தைகள் அதிகம் விரும்பி உண்கின்றனர். அதேநேரத்தில், நார்ச்சத்து மிகுந்த கீரைகள், காய்கறிகளை எடுத்துக்கொள்வது குறைந்துவிட்டது. சர்க்கரை சத்து அதிகம் கொண்ட உணவு பண்டங்களையும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

அத்துடன், விளையாட்டு உள்ளிட்ட உடற்பயிற்சிகளில் போதிய அளவு ஈடுபடாததும் அவர்களது உடல் பருமனை அதிகரித்து விடுகிறது. இதனால் அவர்களுக்கும் சர்க்கரை நோய் வந்துவிடுகிறது.
 

சரி... குழந்தைகளுக்கு சர்க்கரைநோய் வராமல் இருக்க என்ன செய்யலாம்?

·       குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், நெய் உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த உணவு பொருட்கள் உண்பதை தவிர்த்துவிடுங்கள்.

·        தினமும் ஒரு மணி நேரமாவது `வாக்கிங்' அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளச் சொல்லுங்கள். விளையாடுவதும் நல்லது தான். நீச்சல் பயிற்சியும் செய்யலாம்.

·        அதிகநேரம் டி.வி. பார்ப்பதை தடுத்திடுங்கள். கம்ப்யூட்டர் முன்பும் மணிக்கணக்கில் ப்ரவுஸ் பண்ணச் சொல்லாதீர்கள். கம்ப்யூட்டரில் வீடியோ கேம் விளையாடுவதையும் குறைத்துக்கொள்ளச் சொல்லுங்கள்.

·        உங்கள் குழந்தைகளை இப்படி `கன்ட்ரோல்' ஆக வளர்த்தால், சர்க்கரை நோய் போன்றவை வராமல் தடுக்கலாம்.


Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.